Sunday, December 14, 2008

என் இதயத்தின் அத்தனை அறைகளிலும்
நீ மட்டும் தான் இருக்கிறாய்..
ஆனால் உன் மணவறையில்
நான் இல்லை..!

என் அழகிய தவறுகள்..

உன்னுடன் பேசாமல் இப்போது இருப்பது - நான்
செய்து கொன்டிருக்கும் தவறு..!
உன்னை முதன் முதலாக சந்தித்து பேசியது -
நான் செய்து முடித்த தவறு..!

Wednesday, July 23, 2008

தனிமை.

கரையில் இட்ட மீனாய்
என்னை துடிக்க வைக்கிற‌து
தனிமை.

மாற்றம்

தூங்கித் தொலைத்த பகல்களும்
தூக்கம் தொலைந்த இரவுகளும்
சாட்சி பகர்கின்றன ‍- உன்னால்
நான் கண்ட மாற்றத்தினை.!